ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் (PWD Act-1995) அறிக

laws in IndiaPerson With disability

இயலாமை

இயலாமை என்பது ஒரு நபரின் உடல், உணர்ச்சி, அறிவுசார் அல்லது மன செயல்பாட்டை பாதிக்கும் நிலைமைகளைக் குறிக்கிறது. இயலாமை என்பது ஒரு சிக்கலான பிரச்சினை, இது தனிப்பட்ட காரணிகள் (சுகாதார நிலை போன்றவை) மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் (மனப்பான்மை மற்றும் தடைகள் போன்றவை) ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது.

UNCRPD

ஐக்கிய நாட்டு சபையில் கூற்றுப்படி உலகின் மிகப்பெரிய சிறுபான்மையினர் மக்கள் மாற்றுத்திறனாளிகளை இவர்களின் உரிமைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமலும் சமுதாயத்திற்கு பங்களிக்க கூடிய மக்களாகவும் அவர்களின் உரிமைகளைப் பெற வழிவகை செய்யும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமைகளை நிர்ணயிப்பது இச்சட்டத்தின் நோக்கமாகும் இச்சட்டத்தில் அரசாங்கமானது மாற்றுத்திறனாளிகள் அவர்களின் ஊனத்தின் காரணமாக எந்த சூழ்நிலையிலும் அவர்கள் உரிமை பாதிக்கப்படாது வகையில் வளரவேண்டும் என்பதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.
நம் இந்தியத் திருநாட்டில் 1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் ஊனமுற்றோரின் உரிமை மற்றும் நலன்கருதி ஏற்படுத்தப்பட்டது இதில் பல்வேறு திருத்தங்கள்  சிறப்பு அம்சங்கள் கொண்டு மாற்றியமைக்கப்பட்ட ஊனமுற்றோருக்கான உரிமை சட்டம் 2016-இல் மத்திய அரசால் இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் ஒப்புதல் பெறப்பட்டு 14-12-2016 இல் வெளியிடப்பட்டது.

ஆசிய-பசிபிக் கண்டங்களில் உள்ள உடல் ஊனமுற்றோர் அவர்களின் வாழ்க்கை மேம்படுத்த கல்வி, வேலைவாய்ப்பு, தடையற்ற சூழ்நிலையை உருவாக்குதல், சமூக பாதுகாப்பு மற்றும் பல்வேறு நிலைகளில் அவர்களை மேம்படுத்த இந்த சட்டம் 253 வது பிரிவின்படி விதி எண் 13 உடல் ஊனமுன்றோர்  முழு பாதுகாப்பு மற்றும் பங்கேற்பு சட்டம் 2016 இந்திய அரசால் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டத்தின்படி அனைத்து விதமான அரசு மற்றும் அரசு சாரா பல்வேறு துறைகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்த இந்த சட்டம் வலுவாக அமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் (சம வாய்ப்புகள், உரிமைகள் மற்றும் முழுப் பங்கேற்பு) சட்டம், 1995ன் படி.

  1. கண் பார்வையற்றோர்
  2. குறைந்த பார்வை
  3. தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்
  4. செவித்திறன் குறைபாடு
  5. பல்வகை ஊனமுற்றோர்
  6. மனவளர்ச்சி குன்றிய நிலை 
  7. மன நோய்

ஊனமுற்றோர் சான்றிதழ்

மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1995 இன் படி, 40% க்கு குறையாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மருத்துவ அதிகாரி சான்றளிக்கப்பட்ட சான்றிதழ் தேவை. பல்வேறு திட்டங்களின் கீழ் பல்வேறு சலுகைகள் மற்றும் பலன்களைப் பெறுவதற்கு ஊனமுற்றோர் சான்றிதழ் இன்றியமையாத ஆவணமாகும்..

தடையற்ற சூழல்

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற மற்றும் அணுகக்கூடிய சூழலை வழங்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பொதுக் கட்டிடங்களில் தடையற்ற கட்டமைக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கான இந்தக் கட்டிட விதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை பொதுக் கட்டிடங்கள் வழங்குவதை உறுதி செய்வதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முனிசிபல் கட்டிட துணைச் சட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரை 22 க்கும் மேற்பட்ட மாநிலங்கள் தங்கள் கட்டிடக் குறியீடுகளில் மாற்றங்களை அறிவித்துள்ளன. மற்றும் ரயில்வே சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், ரயில் நடைமேடைகள் மற்றும் விமான நிலையங்களில் பேருந்து நிலையம் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற மற்றும் அணுகக்கூடிய சூழலை வழங்குவதற்கான அம்சங்களை வழங்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கும் (CPSEs) பொது நிறுவனங்களின் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மறுமொழி இடவும்