இருட்டு அறையில் இருவாய்ச்சிகள்

இருவாய்ச்சிகள் (Hornbills)
இருவாய்ச்சிகள் (Hornbills)

பறவைகளின் வாழ்க்கை

நாம் ஒரு பறவையாக இருந்தால், எளிதில் பறந்துவிடுவோம் என்று நினைக்கிறோம், ஆனால் பறவைகளின் வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல, அது மற்றவர்களுக்கு ஒரு கற்றல் பயணம். காடுகளின் விவசாயிகள்” அல்லது “வனங்களின் கட்டிடக் கலைஞர்கள்” என்று அழைக்கப்படும் இருவாய்ச்சிகள் (Hornbills) பறவைகளின்  வாழ்க்கை நமக்கு  துன்பங்களைச் சமாளிக்கும் திறன் ,பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொடுக்கிறது.

இருவாய்ச்சிகள் (Hornbills)

இந்த இருவாச்சி பறவைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்திலும், நீண்ட வளைந்த மூக்குடனும் இருக்கும். இந்தப் பறவைகள் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடர்ந்த வனப் பகுதிகளில் காணப்படுகின்றன.

இருவாச்சி பறவைகளைப் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான விஷயம் அவற்றின் வாழ்க்கை முறை. அதன் இனப்பெருக்க காலத்தில் அது தனது மனைவியை எப்படி நேசிக்கிறது, அந்த ஏழு வாரங்களில் ஆண்  பறவை உணவு தேடி அலையும் விதம்  மிகவும் அற்புதமானது ஆனால்?

பெண் இருவாட்சியின் தியாகம்

பெண் இருவாட்சி பறவையின் கதை அதை விட மிகவும் சுவாரஸ்யமானது இனபெருக்க காலத்தில் அவள் தனது துணையுடன் சேர்ந்து மிக உயரமான மரங்களைத் தேடி அலைந்து, இயற்கையாக  அமைந்த  மரப்பொந்தில் தேர்ந்து எடுத்து அதில் தங்களின் அடுத்த தலைமுறையினரின் உருவாக்க அதன் உள்ளே சென்ற பெண் பறவை பொந்துக்குள் அமர்ந்தவுடன் ஆண் பறவை தனது எச்சில் மற்றும் ஆற்று படுகைகளில் இருந்து சேகரிக்கும் ஈரமான மண்ணைக் கொண்டு கூட்டை மூடிவிடும். பெண் பறவைக்கு உணவு கொடுக்க ஒரு சிறிய துவாரத்தை மட்டும் விட்டுவிடும்.  பெண் பறவை தனது இறக்கை முழுவதையும் உதிர்த்து ஒரு மெத்தை போன்ற தளத்தை ஏற்படுத்தி  அதை ஒரு படுக்கையாக மாற்றுகிறாள். அவள் தனது முட்டைகளை அங்கு  இடுகிறாள், அவளுடைய முழு உடலிலும் முடி இல்லாமல், அதுவும், அவள் ஒரு இருண்ட மரக் குழியில் முழுமையாக அடைக்கப்பட்டு, தன் குஞ்சுகளுக்காக வாழ்கிறாள்.

சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் (Eco-engineers)

இருவாய்ச்சிகள் பறவைகள் “காடுகளின் விவசாயிகள்” அல்லது “வனங்களின் கட்டிடக் கலைஞர்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இருவாய்ச்சிகள் பறவைகள் காடுகளில் விதைகளை விதைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த பறவைகள், பழங்களைச் சாப்பிட்டு, அவற்றின் விதைகளை தங்கள் எச்சத்தின் மூலம் வெவ்வேறு இடங்களுக்குப் பரப்புகின்றன. இதன் மூலம் காடுகள் மீண்டும் உருவாகவும், வளரவும் உதவுகின்றன. அவை இல்லையெனில், பல தாவர இனங்கள் அழிந்துவிடும் அபாயம் உள்ளது.

இருவாய்ச்சிகள் (Hornbills)1
இருவாய்ச்சிகள் (Hornbills)1

பல்லுயிர் பெருக்கத்தின் அடையாளம்

இருவாய்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட காட்டின் பல்லுயிர் பெருக்கம் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஒரு நல்ல குறியீடாகச் செயல்படுகின்றன. ஒரு காட்டில் இருவாய்ச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அது ஆரோக்கியமானதாகவும், பல்லுயிர் வளம் கொண்டதாகவும் உள்ளது என்று பொருள். எனவே, இருவாய்ச்சிகளைப் பாதுகாப்பது, அந்தக் காடு மற்றும் அங்கு வாழும் பிற உயிரினங்களையும் பாதுகாப்பதற்குச் சமம்.

தற்போது, ​​பல இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் விதைகள் போடப்படுகின்றன, ஆனால் பறவைகள் இயற்கையாகவே விதைகளை விதைக்க அனுமதிப்பது காடுகளின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த வழியாகும். பறவைகளைப் பாதுகாப்பதன் மூலம் காடுகளைப் பாதுகாக்க முடியும்.

இருவாய்ச்சிகள் (Hornbills) பாதுகாக்கப்பட வேண்டியதற்கு பல முக்கியமான காரணங்கள் உள்ளன. இவை இந்தியாவின் சூழலியல் சமநிலையில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தமிழகத்தில் காணப்படும் நான்கு வகை இருவாச்சிப்பறவைகள் 1. பெரும் பாத இருவாச்சி, 2. மலபார் இருவாச்சி, 3.சாம்பல் நிற இருவாச்சி, 4. மலபார் பாத இருவாச்சி. இவை மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்னிந்தியாவில் காணப்படுபவை.

மறுமொழி இடவும்