கடல் ஆமைகளின் அற்புதப் பயணம் (மணல் to கடல்)
மணல் to கடல்
(மணலில் இருந்து கடல்) கடல் ஆமைகளின் அற்புதப் பயணம் இது வெறும் ஒரு கதை அல்ல கடல் ஆமைகளின் வாழ்க்கைச் சுழற்சியின் ஒரு முக்கியமான பகுதியான முட்டையிடுதல் மற்றும் குஞ்சு பொரித்தல் பற்றிய கதை.
ஒரு குட்டி ஆமை முட்டையிலிருந்து குஞ்சு பொரித்து கடலை நோக்கி செல்லும் போது குஞ்சுகளுக்கு முதல் சில நிமிடங்கள் மிக முக்கியமானவை. அவை பறவைகள், நரிகள் மற்றும் நண்டுகள் போன்ற வேட்டையாடுபவர்களைத் தவிர்த்து, மணல் வழியாகச் செல்ல வேண்டும், மேலும் அவற்றின் சக்தி தீர்ந்து போவதற்கு முன்பு கடலை அடைய வேண்டும். தண்ணீரில் மீண்டும் ஒருமுறை அவை நீரோட்டங்கள் மற்றும் வேட்டையாடுபவர்கள் போன்ற புதிய சவால்களை எதிர்கொள்கின்றன.
குட்டி ஆமை நீந்தும்போது அதன் தாயிடமிருந்து கவனிப்பு, பாதுகாப்பு மற்றும் அரவணைப்பு போன்ற எந்த சூழ்நிலையும் இல்லாத போது கடலை நோக்கி தனது பயணத்தைத் தொடங்குகிறது.
இது ஒவ்வொரு ஆண்டும் நிகழும் ஒரு அற்புதமான நிகழ்வு நவம்பர் முதல் மார்ச் வரை ஒடிசாவிலிருந்து கன்னியாகுமரி வரையிலான கடற்கரைகள் பகுதிகளில் இனப்பெருக்கத்திற்காக வந்து முட்டைகளை இட்டு செல்லுகின்றன எனபதை விட பல ஆண்டுகள் கழித்து அது தன் பிறந்த கடற்கரையை நோக்கி பயணிக்கிறது என்பது ஒரு சிறப்பு ஆகும். வழியில் அது பல சவால்களை எதிர்கொள்கிறது இந்த குஞ்சுகள் வளர்ந்து பெரிய பெண் ஆமைகளாக மாறி தாங்கள் பிறந்த அதே கடற்கரைக்குத் திரும்பி வருகின்றன.
தமிழ்நாட்டுக்கு வரும் ஆமை இனங்கள்
சித்தாமை, பச்சையாமை, கிளி மூக்கு ஆமை, சோனியாமை, பெருந்தலையாமை ஆகிய ஐந்து வகையான கடல் ஆமைகள் அனைத்தும் தனித்துவமான உடல் அமைப்பு மற்றும் வாழ்க்கை முறைகளைக் கொண்டுள்ளன.
கடல் ஆமைகளின் நீண்ட ஆயுள் மற்றும் இடப்பெயர்ச்சி
கடல் ஆமைகள் 100 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழும் திறன் கொண்டவை. தான் பிறந்த இடத்திற்கு திரும்பி வந்து முட்டையிடும் அவற்றின் இடப்பெயர்ச்சி நடத்தை மிகவும் வியப்பளிக்கும் ஒன்று. இது அவற்றின் அதிர்ச்சியூட்டும் நினைவாற்றலைக் காட்டுகிறது
கடல் ஆமைகளின் பயணம்:
ஆமைகள் பூமியின் காந்தப்புலம் மற்றும் கடல் நீரோட்டங்களைப் உணர்ந்து தங்கள் பிறந்த பிறந்த இடத்திற்கு வரும் ஒரே விலங்குகள் கடல் ஆமைகள் மட்டுமே. ஏன் இப்படிச் சொல்கிறார்? பிறந்த உடனேயே, கடலுக்குள் சென்று விசா இல்லாமல், விமானம் இல்லாமல், பணம் இல்லாமல் படிப்பு இல்லாமல் 350 டிகிரி சுழன்று, சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு போன்ற நாடுகளுக்கு உலகப் பயணம் மேற்கொண்டு பருவமடைந்த பிறகுதான் அதன் பிறந்த இடத்திற்குத் திரும்பும் கடல் ஆமை ஒரு சிறந்த கடல் உயிரினம்.
முட்டையிடுதல்:
கடல் ஆமைகள் முட்டையிடும் செயல்முறை மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் இயற்கையின் அற்புதமான நிகழ்வு.
கடல் ஆமைகள், கடற்கரையில் குழிகளை தோண்டி, எந்த இடம் அதிக பாதுகாப்பானது என்று கண்டறிந்து அதில் முட்டையிடும். மணலின் தன்மை மணலின் ஈரப்பதம் வெப்பநிலை போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு முட்டையிடும் இடத்தைத் தேர்ந்தெடுக்கும். அதில் தங்கள் முட்டைகளை புதைக்கின்றன.
கடல் ஆமைகள் ஏன் ஒரே இடத்தைத் தேர்ந்தெடுக்கின்றன?
கடல் ஆமைகள் தாங்கள் பிறந்த அதே கடற்கரையில் திரும்பி வந்து முட்டையிடும் பழக்கம் கொண்டவை.
இதுஒரு இயற்கையான உந்துதல் தாங்கள் பிறந்த இடம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கருதுவதால் அதே இடத்தைத் தேர்ந்தெடுக்கின்றன.
மணலின் தன்மை முட்டையிட ஏற்ற மணலின் தன்மை, வெப்பநிலை போன்ற காரணிகளும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
குஞ்சு பொரித்தல் சுமார் 45-70 நாட்களில், முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவருகின்றன.
கடலுக்குள் பயணம்:
சந்திரனின் ஒளியை வழிகாட்டியாகக் கொண்டு, குஞ்சுகள் கடலுக்குள் செல்கின்றன.
திரும்ப வருதல்:
20 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த குஞ்சுகள் வளர்ந்து பெரிய ஆமைகளாக மாறி, தாங்கள் பிறந்த அதே கடற்கரைக்குத் திரும்பி வருகின்றன.
கடல் ஆமைகள் நமக்கு எவ்வாறு பயனளிக்கின்றன?
சூழலின் சமநிலை:
கடல் ஆமைகள், கடல்வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை கடல் புற்களை உண்ணுவதன் மூலம், கடல் புற்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, கடலின் சமநிலையை பேணுகின்றன.
கடற்கரையின் பாதுகாப்பு:
கடல் ஆமைகள் பொதுவாக ஆரோக்கியமான கடற்கரைகளைத் தேர்ந்தெடுத்து முட்டையிடுகின்றன. இதனால், கடற்கரையின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
கடல் ஆமையின் பருவம் வருவதற்கு முன் அந்த ஆமை ஆண் பெண்ணா என்பதை கண்டறிவது மிகவும் கடினம்
வங்காள விரிகுடாவில் கடல் ஆமைகள் முட்டையிடுவதற்கான காரணங்கள்
காலநிலை: நவம்பர் முதல் மார்ச் வரை வங்காள விரிகுடாவில் காலநிலை கடல் ஆமைகளுக்கு இனப்பெருக்கத்திற்கு ஏற்றதாக இருக்கும். இதில் கடல் நீரின் வெப்பநிலை, மழைப்பொழிவு போன்ற காரணிகள் அடங்கும்.
கடற்கரையின் தன்மை: இந்த காலகட்டத்தில் இந்த கடற்கரைகள் அமைதியாகவும், குறைந்த அலைகளுடனும் இருக்கும். இது முட்டையிடவும், குஞ்சுகள் வெளிவரவும் பாதுகாப்பான சூழலை வழங்குகிறது.
உணவு கிடைக்கும் தன்மை: இப்பகுதியில் கடல் ஆமைகளுக்கு போதுமான உணவு கிடைக்கிறது. இது அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது.
கடல் ஆமை முட்டைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம்
அழிவின் விளிம்பில்: பல கடல் ஆமை இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. அவற்றின் முட்டைகள் மற்றும் குஞ்சுகள் இயற்கை எதிரிகள், மனித நடவடிக்கைகள் போன்ற பல்வேறு காரணங்களால் அழிக்கப்படுகின்றன.
பல்லுயிர்ப் பெருக்கம்: கடல் ஆமைகள் கடல் வாழ்மண்டலத்தின் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றின் அழிவு கடல் வாழ் மண்டலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கடல் ஆமைகள் மிகவும் பழமையான உயிரினங்கள். அவற்றைப் பாதுகாப்பது என்பது பூமியின் வரலாற்றைப் பாதுகாப்பதற்கு சமம்.
முடிவுரை:
கடல் ஆமைகளின் முட்டைகளைப் பாதுகாப்பது என்பது அவற்றின் இனத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நம் கடல் வாழ் மண்டலத்தையும், பூமியின் வரலாற்றையும் பாதுகாப்பதாகும். இதற்கு அரசு, பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.