Namma Gram Sabhai App (நம்ம கிராம சபை செயலி) ஓர் பார்வை
நம்ம கிராம சபை செயலி
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆண்டுக்கு ஆறு முறை, குறிப்பாக குடியரசு தினம் (ஜனவரி-26) உலக தண்ணீர் தினம் (மார்ச்-22) தொழிலாளர் தினம் (மே-1) சுதந்திர தினம் (ஆகஸ்ட் – 15) காந்தி ஜெயந்தி (அக்-2 ) மற்றும் உள்ளாட்சி அமைப்பு தினம் (நவம்பர்-1) போன்ற முக்கிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தக் கூட்டங்களில், கிராம ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் நேரடியாகப் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
கிராம வளர்ச்சித் திட்டங்கள், மத்திய-மாநில அரசின் திட்டங்கள், ஊராட்சியின் நிதிநிலை, மக்களின் நலன், குழந்தைகள் நலன், வறுமை ஒழிப்பு, மாற்றுத் திறனாளிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இவ்வாறு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மற்றும் கூட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்த தகவல்களை ஒரே இடத்தில் பதிவு செய்வதற்காகவே இந்த நம்ம கிராம சபை பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது
செயற்கை நுண்ணறிவு (AI)
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஊரக வளர்ச்சித் துறைக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு மொபைல் பயன்பாடே நம்ம கிராம சபை செயலி. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில், செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் புகுந்துள்ளது. கணினிமயமாக்கல் எல்லா இடங்களிலும் பரவியுள்ள இந்த சூழலில், பஞ்சாயத்து ராஜ் துறையும் கிராம மக்களின் முன்னேற்றத்திற்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே நம்ம கிராம சபை செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
கைபேசி செயலி
நம்ம கிராம சபை (app) என்கிற புதிய கைபேசி செயலி கிராம சபை கூட்டத்தின் நிகழ்வுகளை கண்காணித்திடும் பொருட்டு ஊரக வளர்ச்சி துறையின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி இயக்குவதற்கு எளிதாகவும் கீழ்காணும் செயல்பாடுகளை பதிவு செய்திட இந்த கிராம சபை செயலி பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்ய வேண்டிய தகவல்கள்
ஒவ்வொரு கிராமசபை கூட்டத்திலும் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை, எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தீர்மானங்கள், குறிப்பாக வரவு-செலவு தொடர்பான தீர்மானங்கள், கிராமத்தில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், வீடு தேவைப்படுபவர்களின் விவரங்கள் (பெயர் உள்ளிட்டவை), அரசின் நலத்திட்டங்கள் தேவைப்படுபவர்களின் விவரங்கள் (பெயர், முகவரி உள்ளிட்டவை) ஆகிய அனைத்து முக்கிய தகவல்களையும் இந்த செயலியில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
- கிராம சபையின் குறைவெண் வரம்பு
- கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
- கிராம சபையில் பங்கேற்ற பற்றாளர்களின் விவரங்கள்
- கிராமசபை நடைபெறும் நேரம்
- கலந்து கொண்ட துறை அலுவலர்களின் விவரம்
- கிராம சபை நடைபெற்ற புகைப்பட ஆதாரங்கள்
ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும், வேளாண்மை, கால்நடை, பால்வளம் உள்ளிட்ட 18 துறைகளின் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்து, அந்தந்தத் திட்டங்களின் பயன்கள் மற்றும் பயனாளிகளின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்
ஊராட்சி நிறுவனங்களின் திறனை வலுப்படுத்தவும் கிராம நிர்வாகத்தின் மூலம் கிராம மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் கிராம சபையின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும் கிராம சபைகளில் நடைபெறும் நிகழ்வுகளைப் பதிவுசெய்து அங்கு நடைபெறும் நிகழ்வுகளின் புகைப்படங்களைப் பதிவேற்றவும் கூட்டத்தின் போது பதிவுசெய்யப்பட்ட பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் எந்த அலுவலர் கலந்து கொண்டார் பிறத்துறை அலுவலர்கள் எத்தனை பேர் கலந்து போன்ற கொண்டார் விவரங்ககள் இந்த இணையதளத்தில் பதிவுசெய்யவும். இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமசபை நிகழ்வுகளை நிகழ் நேரத்தில் கண்காணித்திடவும் அதில் கலந்து கொண்ட அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் குறித்து அறிந்து கொள்ளவும் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும்.