மின்சாரத்தின் முக்கியத்துவமும் அதன் உற்பத்தி முறைகளும்

மின்சாரத்தின் முக்கியத்துவமும் அதன் உற்பத்தி முறைகளும்
மின்சாரம் இல்லாத ஒரு உலகத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள்! இன்று நாம் வாழும் நவீன வாழ்க்கை முறை முற்றிலும் முடங்கிவிடும். காலையில் கண் விழிப்பது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை நமது அன்றாட வாழ்வில் மின்சாரம் ஒரு இன்றியமையாத அங்கமாக மாறிவிட்டது. மனிதனின் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க, மின்சாரத்தின் தேவையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

நமது பயன்பாட்டிற்கான மின்சாரம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் மின் மூலங்கள் எனப்படும் பல்வகையான மின் மூலங்கள்யில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது.

முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள்:

1. அனல் மின் நிலையங்கள் (Thermal Power Plants):

நிலக்கரி, டீசல் அல்லது இயற்கை எரிவாயு போன்றவற்றை எரிப்பதன் மூலம் கிடைக்கும் வெப்ப ஆற்றலைக் கொண்டு நீர் கொதிக்க வைக்கப்பட்டு நீராவியாக மாற்றப்படுகிறது. இந்த அதிக அழுத்தமுடைய நீராவியைக் கொண்டு சுழலிகள் (Turbines) இயக்கப்படும் போது, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னாக்கி (Generator) மூலம் மின்சாரம் உற்பத்தியாகிறது.

தமிழகத்தின் முக்கிய மின் நிலையங்கள் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி திருவள்ளுவர் மாவட்டத்தில் என்னும் எண்ணூர் மற்றும் இவை முக்கிய மின்சார தேவைகளை நம் தமிழகத்திற்கு தருகின்றன நெய்வேலி மின் நிலையங்கள் நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தியை செய்கின்றனர்.

2. நீர் மின் நிலையங்கள் (Hydroelectric Power Plants):

அணைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரானது, அதிவேகமாக கீழே விழச் செய்யப்படுகிறது. இந்த நீரின் ஓட்டத்தினால் சுழலிகள் இயக்கப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் நீண்ட காலம் உழைக்கக்கூடியவை மற்றும் மிகவும் சிக்கனமான மின் உற்பத்தி முறையாகும்.
நீர் மின் நிலையங்கள் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணைக்கட்டுகள் நமக்கு நீர் மூலமாக மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கு தருகிறது

3. அணு மின் நிலையங்கள் (Nuclear Power Plants):

அணுக்கரு பிளவு அல்லது இணைவின் போது வெளியாகும் அணுக்கரு ஆற்றலைக் (Nuclear energy) கொண்டு நீர் கொதிக்க வைக்கப்படுகிறது. இதனால் உருவாகும் நீராவியைக் கொண்டு சுழலிகள் இயக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு அணு ஆற்றலானது மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்பாக்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம் போன்றவை நமக்கு அணு மின் நிலையங்கள் ஆகும் இவற்றின் மூலம் தமிழகத்தின் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது

4. காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் (Wind and Solar Power):

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் காற்றாலை மின் உற்பத்திக்கு பெயர் பெற்றது. காற்றின் வேகத்தைக் கொண்டு காற்றாலையின் பெரிய விசிறிகள் சுழற்றப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதுதவிர, பல்வேறு இடங்களில் பரவலாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி தகடுகள் (Solar panels) மூலம் சூரிய ஆற்றலும் மின்சாரமாக மாற்றப்படுகிறது.

காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியும் திருநெல்வேலி மாவட்டத்தில் கயத்தாறு பகுதிகளில் உற்பத்தி

இத்தகைய பல்வேறு முறைகளில் கடின உழைப்பிற்குப் பிறகே மின்சாரம் நமக்கு கிடைக்கிறது. எனவே, மின்சாரத்தின் அருமை உணர்ந்து அதைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது நம் அனைவரின் கடமையாகும்.

மறுமொழி இடவும்